நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : மகளை காணவில்லை என, தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
பண்ருட்டி அடுத்த பாலுாரைச் சேர்ந்தவர் ஆதி மகள் ஆர்த்தி,20; இவர், கடலுாரில் தனியார் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 29 ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து ஆதி அளித்த புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து, ஆர்த்தியை தேடி வருகின்றனர்.