ADDED : ஜன 02, 2024 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி ; -புவனகிரி பகுதியில் கஞ்சா விற்ற மூவரை போலீசார் கைது செய்தனர்.
புவனகிரி சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் புவனகிரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது புவனகிரி தாமரை குளம் தெருவை சேர்ந்த ஸ்டாலின், 20; மற்றும் கீரப்பாளையம் கே.ஆடூர். மாரியம்மன் கோவில் தெருச் சேர்ந்த அமர்நாத், 26; பரங்கிப்பேட்டை மாதாக்கோவில் தெருவைச் சேர்ந்த கார்த்திக், 27; ஆகியோர், கஞ்சா போட்டலங்களை வைத்திருந்தது தெரியவந்தது.
மூவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 40 கிராம் உள்ள கஞ்சா பொட்ட லங்களை பறிமுதல் செய்தனர்.

