/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் இயற்கை சூழலை காண பயணிகள் ஆர்வம்
/
பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் இயற்கை சூழலை காண பயணிகள் ஆர்வம்
பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் இயற்கை சூழலை காண பயணிகள் ஆர்வம்
பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் இயற்கை சூழலை காண பயணிகள் ஆர்வம்
ADDED : அக் 01, 2025 01:38 AM

சிதம்பரத்தில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பிச்சாவரம் சுற்றுலா மையம். இங்கு, 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், சதுப்பு நிலக்காடுகளுடன், இயற்கை சூழலுடன், மருத்துவ குணம் கொண்ட சுரபுண்ணை என்னும் மாங்குரோவ்ஸ் தாவரங்கள் நிறைந்திருப்பதால், உலக அளவில் இந்த சுற்றுலா மையம் சிறப்பு வாய்ந்தது.
இங்கு, 20 வகையான சுரப்புண்ணை தாவரங்கள், 18 வகையான மூலிகை தாவரங்கள் உள்ளது. மேலும், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்வாய்கள், ஒரே மாதரியாக இருப்பது வியப்பாக இருக்கும். இதனால், பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து படகு சவாரி செய்து மகிழ்ச்சியடைந்து செல்கின்றனர்.
குறிப்பாக, கோடை காலங்களில், தினமும் ஆயிரக்கணக்கில், சுற்றுலா பயணிகள் காலை முதலே வந்து குவிந்து விடுவார்கள். விடுமுறை நாட்களில் வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படும்.
சுற்றுலா பயணிகள் வனக்காடுகளுக்கு சென்று வர, பிச்சாவரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், இயந்திர படகுகள், துடுப்பு படகுகள் இயக்கப்படுகிறது. படகில் வனக்காடுகளை சுற்றி பார்க்க காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை அனுமதி.
வனக்காடுகளுக்கு படகில் செல்ல முடியாதவர்கள், சுற்றுலா மையத்தில் உள்ள கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி, மாங்குரோவ்ஸ் தாவரங்களை நின்ற இடத்தில் இருந்தப்படியே கண்டு ரசிக்கின்றனர். சிறுவர்கள் விளையாட பூங்கா, சிற்றுண்டி, சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, பயணிக்கும் நேரத்தை கணிக்கும் வகையில் ஸ்கேனிங் வசதி, டோக்கன் சிஸ்டம், ஆன்லைன் புக்கிங் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பிச்சாவரம் சுற்றுலா மேலாளர் பைசல் அகமது கூறுகையில், 'பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். ஆன்லைன் மூலம் புக்கிங் செய்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய முன்பதிவு செய்யப்பட்ட நேரத்திற்கு 20 நிமிடத்திற்கு முன்பு வந்தால் போதுமானது'என்றார்.