/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
/
பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ADDED : ஆக 16, 2025 03:15 AM

கிள்ளை: பிச்சாவரம் வனச்சுற்றுலா மையத்தில், சுதந்திர தினத்தையொட்டி சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் வன சுற்றுலா மையத்திற்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து, படகு சவாரி செல்கின்றனர். சுதந்திர தினத்தையொட்டி நேற்று விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பிச்சாவரம் வருகை தந்தனர்.
இதனால் காலை முதலே சுற்றுலா மைய வளாக முழுவதும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வனக்காடுகளை சுற்றி பார்க்க படகில், அனைவரும் ஒரே நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், பெரும்பாலான பயணிகள் கா த்திருந்து படகில் வனக்காடுகளுக்கு சென்று இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.