/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிச்சாரவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
/
பிச்சாரவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ADDED : ஜன 02, 2024 07:25 AM

கிள்ளை : ஆங்கில புத்தாண்டையொட்டி, நேற்று பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில் வன சுற்றுலா மையம் உள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பிச்சாவரத்தில் குவிந்து, குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இதனால், காலை முதலே சுற்றுலா மையத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வனக்காடுகளை சுற்றிபார்க்க, பல மணி நேரம் காத்திருந்து, படகு சவாரி செய்தனர். சுற்றுலா மையத்தில் உள்ள கண்காணிப்பு கோபுரத்தில் இருந்தும், வனக்காடுகளை கண்டுகளித்தனர்.

