ADDED : ஏப் 14, 2025 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம், : பெண்ணாடத்தில் ரூ. 3 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர் இயக்கி வைக்கப்பட்டது.
பெண்ணாடம் துணைமின் நிலையம், மாளிகைக்கோட்டம் பீடரில் குறைந்த மின்னழுத்தம், அதிக மின்பளு காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இதனால் வார்டு மக்கள், வணிகர்கள் அவதியடைந்தனர்.
அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், பெண்ணாடம் அய்யனார் குளத்தெருவில் ரூ. 3 லட்சத்து 17 ஆயிரத்து 790 ரூபாய் செலவில் 25 கே.வி.ஏ., திறனுடைய புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. இது மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கப்பட்டது.
பெண்ணாடம் நகரம் உதவி பொறியாளர் வெங்கடேசன், பேரூராட்சி வார்டு கவுன்சிலர் அனந்த ராமகிருஷ்ணன், மின்பாதை ஆய்வாளர் சந்திரன், மின்வாரிய பணியாளர்கள், வார்டு மக்கள் பங்கேற்னர்.

