/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தறிகெட்டு ஓடிய கார் மோதி விபத்து; சாலையோரம் நின்றிருந்த இருவர் பலி
/
தறிகெட்டு ஓடிய கார் மோதி விபத்து; சாலையோரம் நின்றிருந்த இருவர் பலி
தறிகெட்டு ஓடிய கார் மோதி விபத்து; சாலையோரம் நின்றிருந்த இருவர் பலி
தறிகெட்டு ஓடிய கார் மோதி விபத்து; சாலையோரம் நின்றிருந்த இருவர் பலி
ADDED : பிப் 01, 2025 12:16 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே தறிகெட்டு ஓடிய கார் மோதி, சாலையோரம் நின்றிருந்த இருவர் இறந்த சம்பவம் குறித்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம், ைஹதராபாத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணபிரசாத்,43; இவர் நேற்று தனது நண்பர்களுடன் டிஎஸ்-08-கேஏ-0928 பதிவெண் கொண்ட காரில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றுக் கொண்டிருந்தார்.
நேற்று மாலை 4:00 மணிக்கு விருத்தாசலம் - சிதம்பரம் சாலை, கம்மாபுரம் அடுத்த சு.கீணனுார் அருகே சென்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த, அதே பகுதியைச் சேர்ந்த செந்தில், 39; சேகர் மனைவி செல்வி, 50; சிற்றரசன் மனைவி சிலம்பரசி, 30, ஆகியோர் மீது மோதியது.
இதில், செந்தில், செல்வி சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்த சிலம்பரசியை, அங்கிருந்தவர்கள் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், விபத்து நடந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாலை 5:00 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் கம்மாபுரம் போலீசார், வாகனங்களின் வேகத்தை குறைக்க பேரிகார்டு அமைப்பதாக கூறியதை ஏற்று, மக்கள் கலைந்து சென்றனர். விபத்து குறித்து கம்மாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.