/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இளைஞரணி நிர்வாகிகளுடன் உதயநிதி ஆலோசனை
/
இளைஞரணி நிர்வாகிகளுடன் உதயநிதி ஆலோசனை
ADDED : பிப் 17, 2024 11:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: கடலுார் மேற்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகளுடன், அமைச்சர் உதயநிதி ஆலோசனை நடத்தினார்.
சென்னை குறிஞ்சி இல்லத்தில், கடலுார் மேற்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அமைச்சர் உதயநிதி தலைமை தாங்கினார். அதில், இளைஞரணி நிர்வாகிகள் செயல்பாடு, ஆண்டு பணிகள், தி.மு.க., மாவட்ட கழகம் சார்பில் இளைஞரணி நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பு மற்றும் லோக்சபா தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு நடந்தது.
மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேஷ்குமார், துணை அமைப்பாளர்கள் துரைராஜ், ராஜேஷ், நாராயணசாமி, சதாம், பாரதிராஜா பங்கேற்றனர்.