ADDED : அக் 01, 2024 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கடலுார் அடுத்த தாழங்குடா தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் அடை யாளம் தெரியாத 45 வயது மதிக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.
தகவலறிந்த தேவனாம்பட்டினம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து இறந்தவர் யார் என விசாரிக்கின்றனர்.