/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அர்ச்சகர்களுக்கு சீருடை: எம்.எல்.ஏ., வழங்கல்
/
அர்ச்சகர்களுக்கு சீருடை: எம்.எல்.ஏ., வழங்கல்
ADDED : ஜன 05, 2024 12:19 AM

நெய்வேலி : நெய்வேலி வேலுடையான்பட்டு முருகன் கோவிலில், தைத்திருநாளை முன்னிட்டு அர்ச்சகர்கள், பணியாளர்கள் மற்றும் துாய்மை பணியாளர்களுக்கு சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சீருடை வழங்கினார்.
நெய்வேலி நகர குழு கோவில்களின் அறங்காவலர் குழு தலைவர் நாகராஜன், அறங்காவலர்கள் திருக்குமார், அண்ணாதுரை, பழனியப்பன், ராமமூர்த்தி, அறநிலையத்துறை ஆய்வாளர் வசந்தம், நெய்வேலி நகர தி.மு.க., செயலாளர் பக்கிரிசாமி, பொருளாளர் மதியழகன், துணைச் செயலாளர்கள் ராம கருப்பன், கோமதி செந்தில்குமார், முன்னாள் தொ.மு.ச., தலைமை நிர்வாகிகள் வீர ராமச்சந்திரன், குருநாதன், மாவட்ட பிரதிநிதி ராம வெங்கடேசன், கடலூர் மேற்கு மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் ராஜேஷ் உடனிருந்தனர்.