sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விபத்தில் 3 பேர் இறந்த வழக்கு: வேன் டிரைவர் கைது

/

விபத்தில் 3 பேர் இறந்த வழக்கு: வேன் டிரைவர் கைது

விபத்தில் 3 பேர் இறந்த வழக்கு: வேன் டிரைவர் கைது

விபத்தில் 3 பேர் இறந்த வழக்கு: வேன் டிரைவர் கைது


ADDED : நவ 02, 2025 11:52 PM

Google News

ADDED : நவ 02, 2025 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: சாலை விபத்தில், 3 பேர் இறந்த வழக்கில் வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார், முதுநகர் அடுத்த கொடிகால்குப்பத்தைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி, 65; இவரது மனைவி ராமாயி,62; மகன் ராஜேஷ்குமார்,33; மூவரும் நேற்று முன்தினம் நெல்லிக்குப்பத்தில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க மொபட்டில் சென்றனர்.

அந்த மொபட்டை ராஜேஷ்குமார் ஓட்டினார். கடலுார்-நெல்லிக்குப்பம் சாலையில், கோண்டூர் பஸ் நிறுத்தம் அருகில் சென்ற போது, எதிரில் வந்த வேன் மோதியதில், பக்கிரிசாமி, ராஜேஷ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ராமாயி கடலுார் அரசு மருத்துவமனையில் இறந்தார்.

புகாரின் பேரில், கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து, விபத்து ஏற்படுத்திய வேன் டிரைவர் சிதம்பரம், குமுடிமுலை கிராமத்தைச் சேர்ந்த பழனி,39; என்பவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us