/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விபத்தில் 3 பேர் இறந்த வழக்கு: வேன் டிரைவர் கைது
/
விபத்தில் 3 பேர் இறந்த வழக்கு: வேன் டிரைவர் கைது
ADDED : நவ 02, 2025 11:52 PM
கடலுார்: சாலை விபத்தில், 3 பேர் இறந்த வழக்கில் வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார், முதுநகர் அடுத்த கொடிகால்குப்பத்தைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி, 65; இவரது மனைவி ராமாயி,62; மகன் ராஜேஷ்குமார்,33; மூவரும் நேற்று முன்தினம் நெல்லிக்குப்பத்தில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க மொபட்டில் சென்றனர்.
அந்த மொபட்டை ராஜேஷ்குமார் ஓட்டினார். கடலுார்-நெல்லிக்குப்பம் சாலையில், கோண்டூர் பஸ் நிறுத்தம் அருகில் சென்ற போது, எதிரில் வந்த வேன் மோதியதில், பக்கிரிசாமி, ராஜேஷ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ராமாயி கடலுார் அரசு மருத்துவமனையில் இறந்தார்.
புகாரின் பேரில், கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து, விபத்து ஏற்படுத்திய வேன் டிரைவர் சிதம்பரம், குமுடிமுலை கிராமத்தைச் சேர்ந்த பழனி,39; என்பவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

