sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

/

வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்


ADDED : ஜூன் 24, 2025 08:08 AM

Google News

ADDED : ஜூன் 24, 2025 08:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை : தலைமை ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து பரங்கிப்பேட்டை ஒன்றிய வட்டார கல்வி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

கிள்ளை அடுத்த மடுவங்கரை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி உள்ளது. இங்கு, 65க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட மூன்று ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.

பள்ளியில், புதியதாக தற்காலிக ஆசிரியர் நியமிப்பதில் கிராமத்தினர் இடையே பிரச்னை உள்ளது. தலைமை ஆசிரியர் ஈஸ்வரி மீது, மடுவங்கரை கிராமத்தை சேர்ந்த சிலர், பரங்கிப்பேட்டை ஒன்றிய வட்டார கல்வி அதிகாரிகளிடம் புகார் செய்ததால், கடந்த 19ம் தேதி சிதம்பரம் அடுத்த சி.கொத்தங்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதனை கண்டித்து மடுவங்கரை கிராமத்தில் ஒரு தரப்பபைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 11:30 மணிக்கு சம்மந்தம் கிராமத்தில் உள்ள ஒன்றிய வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

தகவலறிந்த வட்டார கல்வி அலுவலர்கள் கந்தசாமி, உமாராணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதனையேற்று மதியம் 2:00 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us