ADDED : ஜன 26, 2024 12:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தில், துணை வேந்தர் கதிரேசன் தலைமையில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
பல்கலைக் கழக சாஸ்திரி அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் துணைவேந்தர் கதிரேசன் தலைமையில், உறுதி மொழி வாசிக்க, அனைவரும் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றனர்.
தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், புல முதல்வர்கள், துறைத் தலைவர்கள், இயக்குநர் கள், இணை, துணை இயக்குநர்கள், ஆசிரியர்கள், துணை வேந்தரின் நேர்முக செயலாளர் பாக்கியராஜ், மக்கள் தொடர்பு அதிகாரி ரெத்தின சம்பத், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

