sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகுகிறோம்: தினகரன்

/

தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகுகிறோம்: தினகரன்

தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகுகிறோம்: தினகரன்

தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகுகிறோம்: தினகரன்


ADDED : செப் 04, 2025 08:48 AM

Google News

ADDED : செப் 04, 2025 08:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார் கோவில்: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலர் தினகரன் அறிவித்தார்.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவிலில் நேற்று நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், அவர் அளித்த பேட்டி:

கடந்த லோக்சபா தேர்தலுக்காக, அ.ம.மு.க., - தே.ஜ., கூட்டணியில் இணைந்தது. அதன்பின், அக்கூட்டணியில் தான் தொடர்ந்தோம்.

ஆனால், சமீப காலமாக அக்கூட்டணியில் நிலவும் நிச்சயமற்ற போக்கு வேதனையை ஏற்படுத்தியது. அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

இந்நிலையில், அ.ம.மு.க., தொடர்ச்சியாக கூட்டணியில் அங்கம் வகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், அக்கூட்டணியில் இருந்து விலகுகிறோம். அடுத்து என்ன முடிவெடுக்கப் போகிறோம் என்பதை வரும் டிசம்பரில் அறிவிப்போம். அப்போது, யாரோடு கூட்டணி என்பது குறித்தும் முடிவெடுத்து அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இரு நாட்களுக்கு முன் தே.ஜ., கூட்டணி யில் இருந்து விலகுவதாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us