ADDED : அக் 18, 2025 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: மனைவி கண்டித்ததால், கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
குள்ளஞ்சாவடி அடுத்த தெற்கு வசனாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன், 65; குடி பழக்கம் உள்ளவர்.
இவர் நேற்று முன்தினம் குடிபோதையில் வீட்டிற்கு வந்த போது, அவரது மனைவி பானுமதி கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த ஜெகதீஸ்வரன் பூச்சி மருந்தை உட்கொண்டதால் மயங்கி விழுந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில், புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனில்லாமல் நேற்று அதிகாலை இறந்தார்.
புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.