sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பள்ளி நேரங்களில் கூடுதல் டவுன்பஸ் இயக்கப்படுமா

/

பள்ளி நேரங்களில் கூடுதல் டவுன்பஸ் இயக்கப்படுமா

பள்ளி நேரங்களில் கூடுதல் டவுன்பஸ் இயக்கப்படுமா

பள்ளி நேரங்களில் கூடுதல் டவுன்பஸ் இயக்கப்படுமா


ADDED : நவ 29, 2024 04:32 AM

Google News

ADDED : நவ 29, 2024 04:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: பள்ளி நேரங்களில் விருத்தாசலம் - திட்டக்குடி மார்க்கத்தில் கூடுதல் அரசு டவுன் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள இறையூர், ஆவினங்குடி, கருவேப்பிலங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அதிகளவில் உள்ளன. இப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு பெரும்பாலான மாணவ, மாணவிகள் டவுன் பஸ்களில் வந்து செல்கின்றனர்.

பள்ளி துவங்கும் போதும்; முடியும் போது மாணவர்கள் காத்திருக்கும் பஸ் நிறுத்தங்களில் பஸ்கள் நிற்காமல் செல்கின்றன. அதில் ஓரிரு பஸ்கள் மட்டுமே நின்று செல்வதால் அனைத்து மாணவர்களும் அதில் முண்டியடித்து ஏறிச் செல்கின்றனர்.

பஸ்சில் இடம் பற்றாக்குறையால், மாணவர்கள் பஸ் படிகளில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர்.

எனவே, பள்ளி நேரங்களில் விருத்தாசலம் - திட்டக்குடி மார்க்கத்தில் கூடுதல் அரசு டவுன்பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us