ADDED : ஜூன் 06, 2025 08:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அருகே பெட்டிக்கடையில், 18 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த பெண்ணை போலீசார் செய்தனர்.
பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கரிக்குப்பம் கிராமத்தில் ரேவதி,51; என்பவர் பெட்டிக்கடையில், சோதனை செய்த போது, அரசால் தடை செய்யப்பட்ட 18 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து ரேவதியை கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.