/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பைக் மீது பஸ் மோதி தொழிலாளி பலி
/
பைக் மீது பஸ் மோதி தொழிலாளி பலி
ADDED : நவ 24, 2025 06:38 AM
பண்ருட்டி: பைக் மீது அரசு டவுன் பஸ் மோதியதில் ஒருவர் பலியானார்.
பண்ருட்டி அடுத்த திருவதிகை அணைக்கட்டு பகுதியை சேர்ந்தவர் பாபு மகன் பாலாஜி,24; சென்ட்ரிங் கூலி தொழிலாளி; இவர் கடந்த, 17 ம் தேதி தனது வீட்டில் இருந்து வளையக்காரகுப்பம் நோக்கி பண்ருட்டி - பாலுார் - கடலுார் சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரில் கடலுார்- பண்ருட்டி நோக்கி வந்த அரசு டவுன்பஸ் பைக் மீது மோதியது. இதில் பலத்த காயத்துடன் பாலாஜி பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின் மேல்சிகிச்சைக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், நேற்றுமுன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

