ADDED : நவ 02, 2024 07:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருகே பஸ் மோதியதில் கூலி தொழிலாளி இறந்தார்.
நெல்லிக்குப்பம் அடுத்த மருதாடு குமராபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன்,37 விவசாய கூலி தொழிலாளி.இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் சாலையை கடந்து நடந்து சென்றார்.அப்போது கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி வேகமாக சென்ற தனியார் பஸ் வேல்முருகன் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த வேல்முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.