ADDED : நவ 12, 2024 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: முதியவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடம் அடுத்த சின்னக்கொசப்பள்ளத்தைச் சேர்ந்தவர் கலையரசன், 56. இவர் நேற்று முன்தினம் தனது பைக்கை பெண்ணாடம் வாள்பட்டறை பஸ் நிறுத்தம் அருகே உள்ள மளிகை கடை முன் நிறுத்தி விட்டு, வெளியூர் சென்று இரவு வந்துள்ளார்.
மீண்டும் பைக்கை எடுக்கும்போது, பெண்ணாடம் வாள்பட்டறை பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் ராஜா, 38. கலையரசனை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். கலையரசன் கொடுத்த புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து ராஜாவை கைது செய்தனர்.

