sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

டவர் மீது ஏறி வாலிபர் மிரட்டல் பெண்ணாடம் அருகே பரபரப்பு

/

டவர் மீது ஏறி வாலிபர் மிரட்டல் பெண்ணாடம் அருகே பரபரப்பு

டவர் மீது ஏறி வாலிபர் மிரட்டல் பெண்ணாடம் அருகே பரபரப்பு

டவர் மீது ஏறி வாலிபர் மிரட்டல் பெண்ணாடம் அருகே பரபரப்பு


ADDED : அக் 30, 2025 06:58 AM

Google News

ADDED : அக் 30, 2025 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: மொபைல் போன் டவர் மீது ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெண்ணாடம் அடுத்த வடகரை காலனியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன், 45; இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் மனை விற்றது தொடர்பாக பிரச்னை இருந்தது. இதுதொடர்பாக வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த பரமேஸ்வரன் நேற்று இரவு 7:30 மணியளவில் அதே பகுதியில் உள்ள 70 அடி உயர தனியார் மொபைல் போன் டவர் மீது ஏறி நின்று கொண்டு, பிரச்னையை தீர்த்து வைக்கக்கோரி தற்கொலை மிரட்டல் விடுத்தார். உறவினர்கள் சமாதானம் பேசியதைத்தொடர்ந்து இரவு 8:00 மணியளவில் கீழே இறங்கினார்.

பிரச்னை காரணமாக திட்டக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. பெண்ணாடம் போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்






      Dinamalar
      Follow us