ADDED : ஆக 08, 2025 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: லாரி மோதி காயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
பெண்ணாடம் அடுத்த இறையூரைச் சேர்ந்தவர் தெய்வீகன் மகன் சந்துரு, 19; இவர் நேற்று முன்தினம் இறையூரில் இருந்து விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
திட்டக்குடி அடுத்த கொடிகளம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி மோதி படுகாயமடைந்தார்.
உடன் அருகிலுள்ளவர்கள் அவரை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.
புகாரின் பேரில், ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதித்து விசாரிக்கின்றனர்.