ADDED : ஏப் 16, 2025 08:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக்கில் சென்றவர் இறந்தார்.
புவனகிரி, மருதுார் அடுத்த மஞ்சக்கொல்லையைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகன் பீட்டர்,23; இவர், நேற்று முன்தினம் பைக்கில் அதே பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர், புவனகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர், பீட்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
புகாரின் பேரில், மருதுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.