/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வன விலங்குகள் வேட்டையாடிய வாலிபர் 3 துப்பாக்கிகளுடன் கைது தப்பியோடிய 3 பேருக்கு வலை
/
வன விலங்குகள் வேட்டையாடிய வாலிபர் 3 துப்பாக்கிகளுடன் கைது தப்பியோடிய 3 பேருக்கு வலை
வன விலங்குகள் வேட்டையாடிய வாலிபர் 3 துப்பாக்கிகளுடன் கைது தப்பியோடிய 3 பேருக்கு வலை
வன விலங்குகள் வேட்டையாடிய வாலிபர் 3 துப்பாக்கிகளுடன் கைது தப்பியோடிய 3 பேருக்கு வலை
ADDED : செப் 28, 2024 06:50 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே மான் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடி விற்பனை செய்து வந்த வாலிபரை கைது செய்த வனத்துறையினர், அவரிடமிருந்து மூன்று நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சிறுபாக்கம் வனப்பகுதியில் உள்ள மான், முயல் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடி விற்கப்படுவதாக புகார் நிலவியது.
அதன்பேரில், விருத்தாசலம் வனச்சரக அலுவலர் ரகுவரன் தலைமையில், வனவர் சிவக்குமார், வனக்காப்பாளர்கள் நவநீதகிருஷ்ணன், ஆறுமுகம், அமுதபிரியன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று சிறுபாக்கம் வனப்பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, நாட்டு துப்பாக்கியுடன் வேட்டையாட சென்ற 4 பேரை, வனத்துறையினர் பிடிக்க முயன்றனர். அதில் மூவர் தப்பிச் சென்றனர். ஒருவர் மட்டும் சிக்கினார்.
விசாரணையில், அவர், சிறுபாக்கத்தை சேர்ந்த பொன்னுசாமி மகன் சாமுவேல்,31; தப்பியோடியவர்கள் சாமுவேல் தம்பி தனவேல், கள்ளக்குறிச்சி மாவட்டம், காட்டு கொட்டகையை சேர்ந்த பழனிவேல் மகன் ரவி, சிறுபாக்கம் டிரைவர் ரவி என்பதும், இவர்கள் தொடர்ச்சியாக வனவிலங்குகளை வேட்டையாடி விற்பனை செய்து வருவது தெரிய வந்தது.
அதன்பேரில் வனத்துறையினர் வழக்கு பதிந்து சாமுவேலை கைது செய்தனர். மேலும், அவர் வைத்திருந்த 3 நாட்டு துப்பாக்கி, கத்தி மற்றும் ெஹட் லைட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய தனவேல், அஜித், ரவியை தேடி வருகின்றனர்.