/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் முதுநகர் அருகே வாலிபர் குத்திக் கொலை
/
கடலுார் முதுநகர் அருகே வாலிபர் குத்திக் கொலை
ADDED : ஜன 02, 2025 07:00 AM
கடலுார்; கடலுார் முதுநகர் அருகே நேற்றிரவு வாலிபர், ஒரு கும்பலால் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
கடலுார் அடுத்த சான்றோர்பாளையத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் சங்கர்,34, டிரைவர். இவர் நேற்று இரவு 11.00 மணிக்கு வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த மர்ம கும்பல் சங்கரை, சரமாரியாக குத்திக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது.
அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில், கடலுார் முதுநகர் போலீசார் சங்கரின் உடலைக் கைப்பற்றி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், கொலையாளிகளை கண்டறியும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

