ADDED : பிப் 19, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாணவியர் காயம்
தர்மபுரி:தர்மபுரி டவுன் பகுதியை சேர்ந்த, 16 வயது மாணவி, அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த, 16ல் மாயமானார். பெற்றோர் புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த, செக்குமேட்டை சேர்ந்தவர் சாந்தி, 43. கடந்த, 15 அன்று மாயமானார். கணவர் ஜெகன் புகார் படி, பென்னாகரம் போலீசார் விசாரிக்கின்றனர். பென்னாகரம் அடுத்த, பி.அக்ரஹாரத்தை சேர்ந்தவர் கவிதா, 22. இவர் கடந்த மாதம், 28ல் மாயமானார். கணவர் முருகன் புகார் படி, பென்னாகரம் போலீசார் விசாரிக்கின்றனர். ஒகேனக்கல் அடுத்த, ஊட்டமலையை சேர்ந்த, 16 வயது மாணவி ஊட்டமலை அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த, 16ல் மாயமானார். பெற்றோர் புகார் படி,
ஒகேனக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

