/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
/
விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 10, 2024 07:20 AM
தர்மபுரி: விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், தர்மபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நேற்று நடந்-தது.
ஐக்கிய முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அர்ச்-சுணன் தலைமை வகித்தார். அகில இந்திய விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் டில்லிபாபு, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்து உட்பட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
விவசாயிகளுடைய உற்பத்தி பொருட்கள் அனைத்தும் கொள்-முதல் செய்ய வேண்டும். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமி-நாதன் அறிக்கையின் அடிப்படையில், விவசாய விளை பொருட்க-ளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும். விவ-சாயிகளின் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்யவேண்டும். தொழிலாளர் விரோத சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். மின் துறையை தனியார் மயமாக்கக்
கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தினர்.

