ADDED : செப் 04, 2024 10:09 AM
அ நிறம் | அளவு
அரூர்: அரூர் கடைவீதியில், புதிதாக, 100 கே.வி.ஏ., மின்மாற்றி அமைக்க கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் கம்பங்கள் நடப்பட்டு, பணி முடிந்த நிலையில், ஒரு சிலர் செய்த ஆட்சேபணையால் பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் ராஜகால்வாய் பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை
அடுத்து, நேற்று அரூர் மின்வாரிய செயற்பொறியாளர் முத்துசாமி தலைமையில், மின்மாற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்-டது. இதில் உதவிபொறியாளர் இளையராஜா மற்றும் ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
