/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரியில் 2 நாளில் 13 டன் பூக்கள் விற்பனை
/
தர்மபுரியில் 2 நாளில் 13 டன் பூக்கள் விற்பனை
ADDED : ஆக 17, 2024 04:31 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், விவசாயிகள் பூக்கள் சாகுபடிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். லாபம் தரக்கூடிய சாமந்தி பூவை அதிகம் பயிரிடுகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில், பாலகோடு, காரிமங்கலம், கம்பைநல்லூர், மொரப்பூர், நல்லம்பள்ளி, தொப்பூர், பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்டில் செயல்படும் பூ மார்க்கெட்டில் விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். இங்கு, விற்பனை செய்யப்படும் பூக்கள் தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்செங்கோடு, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மாநிலங்களுக்கும் வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.
இந்நிலையில், கடைசி ஆடி வெள்ளி மற்றும் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, நேற்று முன்தினம், தர்மபுரி பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்து, கிலோ சாமந்திப் பூ, 300 ரூபாய், சன்னமல்லி, 900, குண்டுமல்லி, 900, சம்பங்கி, 240, பன்னீர் ரோஸ், 150, பட்டன்ரோஸ், 160, காக்டான், 500 ரூபாய் என, 10 டன் பூக்கள் விற்பனையானது. அதை தொடர்ந்து, நேற்று விலை குறைந்து, சாமந்திப் பூ, 200 ரூபாய், சன்னமல்லி, 400, குண்டுமல்லி, 400, சம்பங்கி, 160, பன்னீர் ரோஸ், 140, பட்டன்ரோஸ், 150, காக்கடான், 240, செண்டுமல்லி, 20 ரூபாய் என, 3 டன் பூக்கள் விற்பனையானது.
கடந்த இரு தினங்களில் தர்மபுரி பூ மார்க்கெட்டில், 13 டன் பூக்கள் விற்பனையானதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.

