sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பல நாட்களாக வீணாகும் குடிநீர் நடவடிக்கைக்கு மக்கள் கோரிக்கை

/

பல நாட்களாக வீணாகும் குடிநீர் நடவடிக்கைக்கு மக்கள் கோரிக்கை

பல நாட்களாக வீணாகும் குடிநீர் நடவடிக்கைக்கு மக்கள் கோரிக்கை

பல நாட்களாக வீணாகும் குடிநீர் நடவடிக்கைக்கு மக்கள் கோரிக்கை


ADDED : மார் 30, 2024 03:29 AM

Google News

ADDED : மார் 30, 2024 03:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி அருகே, பல நாட்களாக வீணாகி வரும் ஒகேனக்கல் குடிநீரால், பொதுமக்கள் கவலையில் உள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாய் பகுதியில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் குழாய் உள்ளது. முட்புதருக்கு இடையில் உள்ள இதில், நாள்தோறும் ஏராளமான லிட்டர் தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. ஒரு சிலர், அவர்களின் பல்வேறு தேவைகளுக்காக குடத்தில் தண்ணீர் பிடித்து செல்கின்றனர். ஆனால், மற்ற நேரங்களில் நாள் முழுவதும் தொடர்ந்து குடிநீர் வெளியேறி அருகில் உள்ள கால்வாயில் செல்கிறது.

இந்த கால்வாய் முழுவதும் முட்புதராக உள்ளதால், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் கூட இதை குடிக்க முடியாத நிலை உள்ளது. தற்போது கோடையில் பல கிராமங்களுக்கு, முறையான குடிநீர் வழங்க முடியாத நிலையில், இவ்வாறு பல மாதங்களாக இந்த குடிநீர் வெளியேறி வருவதால், இதை காணும் பொதுமக்கள் கவலையடைந்து வருகின்றனர். எனவே, குடிநீர் வீணாவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us