ADDED : செப் 04, 2024 10:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதிகோன்பாளையம்: கிருஷ்ணகிரி மாவட்டம், பேச்சம்பள்ளி அடுத்த, வாடமங்கலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி அண்ணாமலை, 57; இவர், நேற்று முன்தினம், தர்மபுரி மாவட்டம், செம்மனஹள்ளியில் உள்ள உறவினர் வீட்டில் இறுதி சடங்கில் கலந்து கொள்ள, தன் டி.வி.எஸ்., மொபட்டில் வந்தார்.
பின்னர், தர்மபுரி - அரூர் சாலையில் செம்மன-ஹள்ளி பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, பின்னால் வந்த கார், அண்ணாமலை மீது மோதி-யதில் படுகாயமடைந்து உயிரிழந்தார். மதி-கோன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.