ADDED : நவ 15, 2025 02:01 AM
தர்மபுரி: 'தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, 68 பஞ்.,கள், 4 பேரூராட்சி-களில், நவ., 18, 19, 20 ஆகிய மூன்று நாள் பராமரிப்பு பணிக-ளுக்காக, குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும்' என, மாவட்ட கலெக்டர் சதீஸ் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, 10 பஞ்.,கள், காரிமங்கலம், 26, பாலக்கோடு, 32 பஞ்.,கள், மற்றும் பாலக்கோடு, பாப்பாரபட்டி, காரிமங்கலம், மாரண்டஹள்ளி ஆகிய பேரூராட்சிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்-நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் மாதாந்திர பராமரிப்பு பணி நவ., 18 அன்று மேற்கொள்ள உத்தேசிக்கப்-பட்டுள்ளதாக மின்வாரியத்தால்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாலக்கோடு, மூங்கில்பட்டியில் உள்ள தரைமட்ட நீர்த்-தேக்க தொட்டியின் பழுதுபட்ட வால்வுகளை நீக்கி புதிய வால்வு-களை பொருத்தும் பணி மேற்கொள்ள இருப்பதால், நவ., 18, 19, 20 ஆகிய மூன்று நாள் ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது. மேற்கண்ட பகுதியினர் இம்மூன்று நாள் உள்ளூர் நீர் ஆதாரங்-களை பயன்படுத்திக்கொள்ளவும். மேலும், பொதுமக்கள் குடி-நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

