/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விவசாயியை வெட்டிய 3 பேருக்கு 7 ஆண்டு சிறை
/
விவசாயியை வெட்டிய 3 பேருக்கு 7 ஆண்டு சிறை
ADDED : டிச 12, 2025 05:39 AM
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சோம
நாதபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசப்பா, 65, விவ-சாயி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சில-ருக்கும் விவசாய நில வழித்தகராறில் முன்வி-ரோதம் இருந்தது.
கடந்த, 2019 அக்., 31ல், வெங்க-டேசப்பாவை அதே பகுதியை சேர்ந்த சந்திரன், 30, முருகேஷ், 29, மஞ்சுநாத், 26 ஆகியோர் அரி-வாளால் வெட்டினர். இதில், வெங்கடேசப்பா-விற்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஓசூர் டவுன் போலீசார், 3 பேரையும் கைது செய்-தனர். இந்த வழக்கு ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று வழக்கை விசாரித்த சார்பு நீதிபதி ஜெய-மணி, குற்றம் சாட்டப்பட்ட, 3 பேருக்கும் தலா, 7 ஆண்டு சிறை தண்டனை, தலா, 2,000 ரூபாய்
அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

