sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பணி மாறுதல் கலந்தாய்வில் 486 ஆசிரியர்கள் 'ஆப்சென்ட்'

/

பணி மாறுதல் கலந்தாய்வில் 486 ஆசிரியர்கள் 'ஆப்சென்ட்'

பணி மாறுதல் கலந்தாய்வில் 486 ஆசிரியர்கள் 'ஆப்சென்ட்'

பணி மாறுதல் கலந்தாய்வில் 486 ஆசிரியர்கள் 'ஆப்சென்ட்'


ADDED : ஜூலை 15, 2025 01:32 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி, தமிழகம் முழுவதும் ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு ஆன்லைன் கலந்தாய்வு கடந்த ஜூலை, 1ல் தொடங்கி, 25 வரை நடக்கிறது. இந்த கலந்தாய்வு தர்மபுரியில் ஆன்லைன் மூலம் சி.இ.ஒ., ஜோதிசந்திரா முன்னிலையில் நடக்கிறது. கடந்த, 1 அன்று அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் பணி மாறுதல் அளிக்கும் கலந்தாய்வு நடந்தது. 2ல் வெளி மாவட்ட மாறுதல் கலந்தாய்வும், 3ல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வும் நடத்தது.

தர்மபுரி மாவட்டத்தில், 31 அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் இடமாறுதலுக்கு, 53 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால், தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக இல்லாததால், தற்போது பணியாற்றி வரும் பள்ளிகளில் பணியாற்ற அனுமதி பெற்றனர். 21 உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் ஆணை வழங்கப்பட்டது. கடந்த, 3ல் நடந்த கலந்தாய்வின் மூலம், தர்மபுரி மாவட்டத்தில் முதுகலை ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று, சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்துார் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பணி மாறுதலில், 17 பேர் சென்றனர்.

கடந், 4 அன்று முதுகலை ஆசிரியர்களுக்கு நடந்த பணிமாறுதலில், 476 முதுகலை ஆசிரியர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில், 32 ஆசிரியர் பணி மாறுதலாக மாற்றுப்பள்ளிக்கு சென்றனர். 158 ஆசிரியர்கள், 'ஆப்சென்ட்' ஆனார்கள். 290 ஆசிரியர்கள் பணிமாறுதலில் விருப்பம் இல்லை என, கலந்தாய்வில் கலந்து கொள்ளவில்லை. கடந்த, 11 அன்று அரசு பள்ளிகளில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வில், 11 உடற்கல்வி ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் பணி மாறுதல் பெற்றனர்.

கடந்த, 1 முதல், 11 வரை நடந்த கலந்தாய்வில் கலந்துகொள்ள, 802 ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில், 96 ஆசிரியர்கள் பணிமாறுதல் ஆணை பெற்றனர். 313 பேர் 'ஆப்சென்ட்' ஆனார்கள். 376 ஆசிரியர்கள் பணி மாறுதலில் விருப்பம் இல்லை என்று கலந்தாய்வில் கலந்து கொள்ளவில்லை.

நேற்று நடந்த, பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில், 125 பணியிடத்திற்கு, 795 பேர் விண்ணப்பம் செய்திருந்த நிலையில், 486 பேர் பங்கேற்கவில்லை. 262 பேர் இடமாற்றத்திற்கு, விருப்பம் தெரிவிக்கவில்லை. 47 பேர் பணி மாறுதலுக்கான ஆணை பெற்றனர். தர்மபுரி மாவட்டத்தில், நேற்று வரை நடந்த கலந்தாய்வில், 143 ஆசிரியர்கள் பணி மாறுதலுக்கான ஆணை பெற்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us