ADDED : பிப் 13, 2026 07:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று, 3வது நாளாக கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் மறியல் போராட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் மாதேசன் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை ஆந்திரா மாநிலத்தில் வழங்குவது போல், தமிழக அரசும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அப்போது மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள், 80 பேரை போலீசார் கைது செய்தனர்.

