/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரூர் சார்பதிவாளர் ஆபீசில் அலைமோதிய மக்கள் கூட்டம்
/
அரூர் சார்பதிவாளர் ஆபீசில் அலைமோதிய மக்கள் கூட்டம்
அரூர் சார்பதிவாளர் ஆபீசில் அலைமோதிய மக்கள் கூட்டம்
அரூர் சார்பதிவாளர் ஆபீசில் அலைமோதிய மக்கள் கூட்டம்
ADDED : ஜூலை 15, 2025 01:35 AM
அரூர், அரூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு, சிக்களூர், தீர்த்தமலை, நரிப்பள்ளி, ஏ.கே.தண்டா, வள்ளிமதுரை, மாம்பட்டி, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, வாச்சாத்தி என எல்லை பரந்து விரிந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர்கள் கிரயம், ஒப்பந்தம், புரிந்துணர்வு ஒப்பந்தம், உயில், செட்டில்மெண்ட் உள்ளிட்டவைகளை அரூர் சார்பதிவாளர் அலுவலகத்திலேயே மேற்கொள்ள வேண்டும். இந்நிலையில் சுபமுகூர்த்த நாளான நேற்று, அரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இது குறித்து, பத்திர எழுத்தர்கள் கூறுகையில், 'வரும், 17ல் ஆடி மாதம் துவங்குவதால், அந்த மாதத்தில் பத்திரங்கள் பதிவு செய்ய மக்கள் தயக்கம் காட்டுவர். இதனால், ஆடி மாதம் முழுவதும் பத்திரப்பதிவு மிகவும் மந்தமாக இருக்கும். எனவே, ஆடி மாத பிறப்பு வருவதால், சுபகூர்த்த நாளான நேற்று, பத்திர பதிவுகள் அதிகமாக நடந்தன. இதனால், சார்பதிவாளர் அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
வழக்கமாக நாளொன்றுக்கு, 30 முதல், 40 பத்திரங்கள் பதிவு செய்யப்படும். ஆனால், நேற்று கூடுதலாக பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டது. இருந்த போதிலும் சர்வர் பிரச்னையால், மக்கள் அவதிக்குள்ளாகினர்' என்றனர்.