/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஒகேனக்கல்லில் ஒற்றை யானை:அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
ஒகேனக்கல்லில் ஒற்றை யானை:அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : மார் 17, 2024 02:42 AM
பென்னாகரம்;தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிகளில் கோடைக்காலமான தற்போது, கடும் வறட்சி நிலவுகிறது. இதனால், கிருஷ்ணகிரி வனப்பகுதியில் இருந்து, ஏராளமான யானைகள் ஒகேனக்கல் வனப்பகுதிக்கு படையெடுத்த வண்ணம் உள்ளன. இவை ஆற்றங்கரையோரத்தில் தண்ணீர் தேடியும், கிராமப்புறங்களில் உணவு தேடியும் சுற்றித்திரிகின்றன.
சுற்றுலா தலமான ஒகேனக்கல்லில், வார விடுமுறையில், ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று ஒகேனக்கல்லில் இருந்து, பென்னாகரம் செல்லும் பன்னப்பட்டியில், ஒற்றை ஆண் யானை ஒன்று சாலையை கடந்தது. இதனால் அவ்வழியே சென்ற டூவீலர் மற்றும் கார்களில் வந்த சுற்றுலா பயணிகள் பீதியடைந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வனத்துறையினர் சத்தமிடாமல், போட்டோ எடுக்காமல், பாதுகாப்பாக வாகனங்களை இயக்கும்படி அறிவுறுத்தி அனுப்பினர்.

