நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிபட்டி, பாப்பிரெட்டிபட்டி அடுத்த பொ.மல்லாபுரம் பேரூராட்சியில், அ.தி.மு.க., ஜெ.,பேரவை சார்பில் திண்ணை பிரசாரம் நடந்தது. மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் அன்பழகன் தலைமை வகித்து பேசினார்.
அ.தி.மு.க., அரசின் சாதனைகளையும், தி.மு.க., அரசின் மக்கள் விரோத போக்கையும் எடுத்து கூறி பிரசாரத்தில் ஈடுபட்டனர். எம்.எல்.ஏ.-,-கோவிந்தசாமி, ஜெ.,பேரவை மாவட்ட செயலர் வெற்றிவேல், மாவட்ட துணை செயலர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.