/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரி நகராட்சி தலைவர், கமிஷனரை கண்டித்து மறியல் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கொந்தளிப்பு
/
தர்மபுரி நகராட்சி தலைவர், கமிஷனரை கண்டித்து மறியல் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கொந்தளிப்பு
தர்மபுரி நகராட்சி தலைவர், கமிஷனரை கண்டித்து மறியல் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கொந்தளிப்பு
தர்மபுரி நகராட்சி தலைவர், கமிஷனரை கண்டித்து மறியல் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கொந்தளிப்பு
ADDED : ஆக 09, 2025 01:48 AM
தர்மபுரி, தர்மபுரி நகராட்சியில் நடக்கும் ஊழலை கண்டித்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நேற்று, நகராட்சி அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடக்கும் என தகவல் அளிக்கப்பட்டது. அ.தி.மு.க., கவுன்சிலர்கள், 4:3-0 மணிக்கு அலுவலகத்திற்கு வந்தனர். அதற்குள் கூட்டம் முடிந்து விட்டது. தீர்மானம் அனைத்தும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக, தர்மபுரி நகராட்சி தலைவர், தி.மு.க.,வைச்சேர்ந்த லட்சுமி அறிவித்துவிட்டு சென்றார்.
இதை கண்டித்து, 10 அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து, நகராட்சி அலுவலகம் முன், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து, 33வது அ.தி.மு.க., கவுன்சிலர் ராஜாத்தி நிருபர்களிடம் கூறியதாவது:
தர்மபுரி நகராட்சி கவுன்சிலர்கள் அவசர கூட்டம் நேற்று மாலை, 4:35 மணிக்கு நடக்கும் என தெரிவித்தனர். முதலில், 5 கவுன்சிலர்கள், 4:30 மணிக்கு வந்து விட்டோம். அதற்குள் கூட்டம் முடிந்து, 52 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்துவிட்டு, தலைவர் லட்சுமி, அவரை தொடர்ந்து, கமிஷனர் சேகரும் சென்றுவிட்டார். தர்மபுரி நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில், 2 முகாம்கள் நடந்தன. இதற்காக, 100 மில்லி அளவு கூட இல்லாத தண்ணீர் பாட்டில்
களுக்கு, 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாக பில் போட்டு உள்ளனர். அதேபோல், தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதாக போலியாக, பில் போட்டு ஊழல் செய்துள்ளனர்.
அன்னசாகரம் பகுதி பாதாள சாக்கடை திட்டத்தில், அங்கிருந்த மணல், கிரவல் மண், ஜல்லி உள்ளிட்டவற்றை வாரி சென்று விட்டனர். நகராட்சி கமிஷனர் சேகர், தி.மு.க., நகர செயலாளர் போல் செயல்படுகிறார். நகராட்சியில் நடக்கும் பல்வேறு ஊழல்கள் மற்றும், 35 தீர்மானங்களை ரத்து செய்யகோரி, மனு அளிக்க கூட்டத்திற்கு வந்திருந்தோம். ஆனால், தலைவர் எதையும் கேட்காமல், அவர் விருப்பம் போல், கூட்டத்தை முடித்து விட்டார். எனவே, நகராட்சி தலைவர் லட்சுமி, கமிஷனர் சேகர் மற்றும் நகராட்சியில் நடக்கும் ஊழலை கண்டித்து, மறியலில் ஈடுபட்டோம்.
இவ்வாறு கூறினார்.
இது குறித்து, தகவல் அறிந்து வந்த, தர்மபுரி டவுன் இன்ஸ்பெக்டர் வேலுதேவன், கமிஷ்னர் சேகர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததால், மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இது குறித்து, நகராட்சி தலைவர் லட்சுமி கூறுகையில், ''நகராட்சி கூட்டம் தொடங்கியபோது, 19 தி.மு.க., கவுன்சிலர்கள், 10 அ.தி.மு.க., கவுன்சிலர்கள் இருந்தனர். நகராட்சிக்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் என்பதால், பெரும்பான்மையுடன் நாங்கள் தீர்மானத்தை நிறைவேற்றினோம். இது, சேர்மனுக்கு உண்டான அதிகாரம் தான். மக்களுக்கான தேவையான திட்டங்களை நிறைவேற்றுவதே எங்கள் இலக்கு,'' என்றார்.