நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தர்மபுரி மாவட்டத்தில், கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனால், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.இந்நிலையில், நேற்று காலை முதலே, அரூர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து, மதியம், 12:30 மணி முதல், அரூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்தது. அரூரில் மாலை, 6:30 மணிக்கு பெய்த கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று பெய்த கனமழையால் வெப்பம் தணிந்ததால், பொதுமக்-களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.
* பாப்பிரெட்டிப்பட்டி, மஞ்சவாடி, பொம்மிடி, பொ.மல்லா-புரம், கடத்துார் பகுதிகளில் நேற்று காலை முதல், வானம் மேக-மூட்டத்துடன் காணப்பட்டது. மதியம், 2 மணிக்கு மேல் லேசான மழையும், பொ.மல்லாபுரம் பகுதியில் நல்ல மழையும் பெய்தது.