sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பெருமாள் கோவில் பூட்டை உடைத்து திருட முயற்சி

/

பெருமாள் கோவில் பூட்டை உடைத்து திருட முயற்சி

பெருமாள் கோவில் பூட்டை உடைத்து திருட முயற்சி

பெருமாள் கோவில் பூட்டை உடைத்து திருட முயற்சி


UPDATED : செப் 23, 2025 09:54 AM

ADDED : செப் 23, 2025 01:52 AM

Google News

UPDATED : செப் 23, 2025 09:54 AM ADDED : செப் 23, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

.

பாப்பிரெட்டிப்பட்டி, : பொம்மிடி அடுத்த கதிரிபுரத்தில், பொம்மிடி - அரூர் மெயின் ரோட்டில் கவரமலை வனத்தையொட்டி பழமையான லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவில் உள்ளது. கோவில் பூசாரி ரவி நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

அன்றிரவு ஸ்கூட்டியில் வந்த, 2 பேர் கோவில் கேட்டின் பூட்டை உடைத்தனர். சத்தம் கேட்டு மக்கள் வந்தபோது, அவர்கள் தப்பினர். இதனால் கோவிலில் உள்ள நகை, உண்டியல் பணம் தப்பியது. அறங்காவலர் பழனி புகார் படி, பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர்.

ஏற்கனவே சில நாட்களுக்கு முன் அப்பகுதியிலுள்ள பச்சையம்மன் கோவிலில் நகை திருடு போனது. அதே பகுதியில் ரோட்டோரம் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த கந்துவட்டிக்காரரிடம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. வாசிக்கவுண்டனுாரில் ஆடுகளை திருடி சென்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us