/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
உணவு பொருளில் கலப்படம் மக்களுக்கு விழிப்புணர்வு
/
உணவு பொருளில் கலப்படம் மக்களுக்கு விழிப்புணர்வு
ADDED : நவ 16, 2025 02:50 AM
ஏரியூர்: பென்னாகரத்தில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாமில், உணவு பொருளில் கலப்படம் குறித்து, உணவு பாது-காப்பு துறை சார்பாக விழிப்புணர்வு செய்யப்பட்டது.
பென்னாகரம் தாலுகா, ஏரியூர் அருகே அழகாகவுண்டனுாரிலுள்ள தனியார்
உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக, 'நலம் காக்கும் ஸ்டாலின்' பல்-துறை உயர் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில், உணவு பாதுகாப்புத்துறை சார்பாக உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. அதில், உணவு பாதுகாப்பு, உணவு பொருள் பாக்கெட்டுகளில் காண வேண்டிய அம்சங்கள் குறித்து, முக்கியமாக பொட்டலமிடப்பட்ட உணவு பொருட்-களில், உணவு பொருள் பெயர், தயாரிப்பு முகவரி, தேதி, காலா-வதி தேதி, உணவு பாதுகாப்பு உரிமம் எண், எடை, எண்-ணிக்கை, உட்காரணிகள் ஊட்டச்சத்து தகவல்கள், நுகர்வோர் தொடர்பு எண் மற்றும் அலர்ஜி தன்மை குறித்து தெளிவாகவும் விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு செய்யப்பட்-டது.அரங்கை பொதுமக்கள், தர்மபுரி கலெக்டர் சதீஸ், பென்னாகரம், பா.ம.க., - எம்.எல்.ஏ.,வான, ஜி.கே.மணி உள்ளிட்டோர் முன்-னிலையில், பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், கலப்பட பொருட்களை எவ்வாறு அறிவது என செயல்
விளக்கம் அளித்தார்.

