/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஓட்டுப்பதிவு குறைந்த பகுதிகளில் விழிப்புணர்வு
/
ஓட்டுப்பதிவு குறைந்த பகுதிகளில் விழிப்புணர்வு
ADDED : மார் 28, 2024 06:56 AM
பாப்பிரெட்டிப்பட்டி : தர்மபுரி லோக்சபா தொகுதி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட தென்கரைக்கோட்டை, பாத்திமா நகர், உள்ளிட்ட, 32 ஓட்டுச்சாவடிகளில், கடந்த தேர்தல்களில் பதிவான ஓட்டு சதவீதம் குறைந்தது. இதையடுத்து மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் சாந்தி உத்தரவின்படி, டி.ஆர்.ஓ., பால் பிரின்சி ராஜ்குமார், தென்கரைக்கோட்டை பாத்திமா நகர் சமுதாய கூடத்தில் 264 மற்றும் 265, ஆகிய ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட வாக்காளர்களிடையே, ஓட்டு அளிப்பதின் முக்கியத்துவம், ஓட்டுப்பதிவு செய்யாததால் ஏற்படும் தீமைகள், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து, அப்பகுதி வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த விழிப்புணர்வு முகாமில், உதவி தேர்தல் அலுவலர் செர்லி ஏஞ்சலா, தாசில்தார் சரவணன், தேர்தல் துணை தாசில்தார் சிவஞானம், ஆர்.ஐ., முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோன்று, பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்ட் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

