sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தாழ்வாக செல்லும் கம்பிகளை சரிசெய்ய மூங்கில் மின்கம்பம்: அதிகாரிகள் அலட்சியம்

/

தாழ்வாக செல்லும் கம்பிகளை சரிசெய்ய மூங்கில் மின்கம்பம்: அதிகாரிகள் அலட்சியம்

தாழ்வாக செல்லும் கம்பிகளை சரிசெய்ய மூங்கில் மின்கம்பம்: அதிகாரிகள் அலட்சியம்

தாழ்வாக செல்லும் கம்பிகளை சரிசெய்ய மூங்கில் மின்கம்பம்: அதிகாரிகள் அலட்சியம்


ADDED : மார் 11, 2025 06:29 AM

Google News

ADDED : மார் 11, 2025 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏரியூர்: ஏரியூர் அருகே, மின் கம்பிகள் தாழ்வாக செல்வதால், அதை சரிசெய்ய மூங்கிலை மின் கம்பமாக பயன்படுத்தி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் அடுத்த தின்னபெல்லுார் சுற்றுவட்டார பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு சில மின்கம்பங்கள் சேதமடைந்தும், அதிலுள்ள மின் கம்பிகள் தாழ்வாகவும் இருப்பதால், அவ்வழியாக செல்லும் வாகனங்களில் மின்கம்பிகள் பட்டு, அசம்பாவிதம் ஏற்பட்டு வருகின்றன. சாலையோரங்களில் அமைக்கப்பட்ட மின்கம்பங்களுக்கு அதிக இடைவெளி இருப்பதால், மின்கம்பிகள் மிக தாழ்வாக செல்கின்றன. இதுகுறித்து மின்வாரிய துறையினரிடம் பலமுறை மக்கள் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை.

இதையடுத்து கிராம மக்கள், உயரமான மூங்கில் கொம்புகளை பயன்படுத்தி, கயிறில் கட்டி, மின் கம்பிகள் கீழே தொங்காத அளவிற்கு, ஒரு மினி மூங்கில் மின்கம்பம் போல் செய்து வைத்துள்ளனர். தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் குறித்து தகவல் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சிய போக்குடன் இருக்கும் மின்வாரியத்துறையினர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரிசெய்ய, கூடுதல் மின் கம்பத்தை நட வேண்டும் என, அக்கிராம மக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us