ADDED : ஜூன் 19, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, தர்மபுரியில், மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். இதில், பா.ஜ., மாநில துணைத்தலைவர் சூர்யா பேசினார்.
கூட்டத்திற்கு பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
மத்திய அரசால், பல ஆயிரம் கோடி ரூபாயில், தமிழகத்தில் பணிகள் நடந்து வருகிறது. காங்., ஆட்சியில் தமிழகத்தின் சார்பில், 12 அமைச்சர்கள் இருந்தும் கொண்டு வர தவறிய நலத்திட்டங்களை, பா.ஜ., - எம்.பி-.,க்கள் தமிழகத்தில் இல்லையென்றாலும், பா.ஜ., அரசு நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறது.
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க.,-வை ஆட்சியில் இருந்து அகற்றுவோம். தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பா.ஜ., தலைமையிலான மத்திய அரசின், 11 ஆண்டுகால சாதனைகளை கடைக்கோடி மக்களிடமும் கொண்டு செல்வோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.