sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தேர் புதுப்பிக்கும் பணி தீவிரம்

/

தேர் புதுப்பிக்கும் பணி தீவிரம்

தேர் புதுப்பிக்கும் பணி தீவிரம்

தேர் புதுப்பிக்கும் பணி தீவிரம்


ADDED : ஆக 23, 2024 04:47 AM

Google News

ADDED : ஆக 23, 2024 04:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி நகரில், கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவிலில் கடந்த, 18 ஆண்டுகளுக்கு முன்புவரை வைகாசி விசா-கத்தின் போது தேரோட்டம் நடத்தப்பட்டு வந்தது. பின், தேர் பழுதானதால், 10 ஆண்டுகளுக்கு முன் தர்மபுரி கடைவீதியில் உள்ள தேர்முட்டி என்ற இடத்தில் தேர் நிலை நிறுத்தப்பட்டது.

தர்மபுரிக்கு பெருமை சேர்ந்து வந்த மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் தேரோட்டத்தை நடத்தும் வகையில், சேதமான தேரை சீரமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. இப்பணிக்காக, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், 6 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளனர். செலவு அதிகரிக்கும் பட்சத்தில், கோட்டை பர-வாசுதேவ சுவாமி கோயில் லட்டு பிரசாத குழுவினர் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளனர். தேர் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பழைய தேரில் இருந்த மரசிற்பங்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டு, புதிய தேரில் பழமை மாறாமல் பொருத்தப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us