sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

லாரி மீது கார் மோதல் கட்டட மேஸ்திரி பலி

/

லாரி மீது கார் மோதல் கட்டட மேஸ்திரி பலி

லாரி மீது கார் மோதல் கட்டட மேஸ்திரி பலி

லாரி மீது கார் மோதல் கட்டட மேஸ்திரி பலி


ADDED : அக் 18, 2024 02:55 AM

Google News

ADDED : அக் 18, 2024 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லாரி மீது கார் மோதல்

கட்டட மேஸ்திரி பலி

பாப்பிரெட்டிப்பட்டி, அக். 18---

பாப்பிரெட்டிப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ், 35. தனியார் பள்ளி டிரைவர். தர்மபுரி அடுத்த புழுதிகரை, சவுளூரை சேர்ந்தவர் முரளி, 29, கட்டட மேஸ்திரி. நண்பர்களான இருவரும், ராஜேஷின் ஸ்கோடா காரில் சொந்த வேலையாக வெளியே சென்று விட்டு வீடு திரும்பினர்.

காரை ராஜேஷ் ஓட்டினார். சாமியாபுரம் கூட்ரோட்டில் நேற்று மாலை, 6:00 மணியளவில் வந்தபோது, தனியார் கிழங்கு மில் அருகே, எதிரே வந்த லாரி மீது வேகமாக மோதியதில் கார் நொறுங்கியது. இதில், காரில் பயணம் செய்த முரளி உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே பலியானார்.

ராஜேஷ் காரின் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடினார். பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினர் வந்து அவரை மீட்டு, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின் மேல்சிகிச்சைக்கு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து நடந்த இடத்தை தர்மபுரி மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன் பார்வையிட்டார். பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். பலியான முரளிக்கு லட்சுமி என்ற மனைவியும், மகன், 2 மகள்கள் உள்ளனர்.






      Dinamalar
      Follow us