ADDED : ஜூலை 23, 2026 01:39 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி: தர்மபுரி அடுத்த கொல்லகொட்டாயை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 44, கட்டட மேஸ்திரி. நேற்று முன்தினம் பழைய தர்மபுரி, கே.என் சவுளூரில் ஒரு புதிய கட்டடத்தின் மேல்தளத்தில் பணிபு-ரிந்துள்ளார்.
மதியம், 3:30 மணியளவில், நிலைதடுமாறி முதல் தளத்திலிருந்து, தவறி விழுந்தார். இதில் காது, மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில், அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு தர்மபுரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்-தனர். தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
