sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஊரின் பெயரை மாற்ற கருத்து கேட்பு கூட்டம்

/

ஊரின் பெயரை மாற்ற கருத்து கேட்பு கூட்டம்

ஊரின் பெயரை மாற்ற கருத்து கேட்பு கூட்டம்

ஊரின் பெயரை மாற்ற கருத்து கேட்பு கூட்டம்


ADDED : ஜூலை 15, 2025 01:36 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில், 19 ஊராட்சிகள் உள்ளன. இதல், 100க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள், 1,000க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இதில் சில கிராமங்கள், பல தெருக்கள் ஜாதி பெயர்களில் அமைந்துள்ளன. இதை பெயர் மாற்றம் செய்ய, அரசு மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்துகிறது.

அதன்படி கடந்த, ஒரு மாதமாக பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடந்து வருகிறது. நேற்று இருளப்பட்டி ஊராட்சியில் துணை பி.டி.ஓ., வேடியப்பன் தலைமையில், மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

இதில் இருளப்பட்டி இந்திரா நகர், பீரங்கி நகர், நாகலுார், காமராஜர் நகர், தாமரை நகர், ஆகிய கிராமங்களில் இருந்து மக்கள் கலந்து கொண்டனர். பெயர் மாற்றுவது குறித்து மக்களிடம் எடுத்துக் கூறப்பட்டது. ஆனால் இருளப்பட்டி எனும் பெயர் மாற்ற மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், 200 ஆண்டுகளுக்காக இருந்து வரும் பெயரை மாற்றக்கூடாது என அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us