/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரூர் பகுதியில் ௩ வது நாளாக தொடர் மழை
/
அரூர் பகுதியில் ௩ வது நாளாக தொடர் மழை
ADDED : ஜூன் 15, 2025 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், மூன்றாவது நாளாக நேற்று மாலை, 5:30 முதல், 6:45 மணி வரை, விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது. இதனால், கிராமப்புறங்களில் தாழ்வான வயல்களில் தண்ணீர் தேங்கியது.
அரூரில் பாட்சாபேட்டை, நான்குரோடு, திரு.வி.க., நகர், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் சாலையில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். தொடர்மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.